search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தொழில் அதிபர்"

    • ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக்கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
    • தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார்.

    விழுப்புரம்:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் புதுச்சேரி நோக்கி காரில் வந்த கர்நாடக மாநிலம், சிவமொக்காவை சேர்ந்த தொழில் அதிபர் ரெஜிமோன்(வயது 53) என்பவரிடம் உரிய ஆவணங்கள் இன்றி வைத்திருந்த ரூ.68 ஆயிரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    இந்த நிலையில் தன்னிடம் இருந்து பறிமுதல் செய்த ரூ.68 ஆயிரத்தை பெறுவதற்காக ஆவணங்களுடன் ரெஜிமோன் தனது நண்பர்களை அழைத்துக் கொண்டு நேற்று விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் பறிமுதல் செய்த பணத்துக்குரிய ஆவணங்கள் மற்றும் இதர விவரங்களை தேர்தல் பிரிவு அலுவலர்களிடம் கொடுத்தார். அதை வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.68 ஆயிரத்தை திருப்பி கொடுத்தனர்.

    பணத்தை பெறுவதற்காக வந்த ரெஜின்மோன் தனது இரு கைகளிலும் தங்க கை சங்கிலி, காப்பு, விரல்களில் மோதிரம், கழுத்தில் தங்கச்சங்கிலிகள் என சுமார் 2¼ கிலோ எடையுள்ள தங்க நகைகளை அணிந்து வந்ததால் அவரை கலெக்டர் அலுவலக ஊழியர்கள், தேர்தல் பிரிவு அலுவலர்கள் மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்தனர்.

    தான் நகை அணிந்து வந்தது குறித்து ரெஜிமோன் கூறும்போது, கர்நாடக மாநிலத்தின் சிவமொக்கா பகுதியை சேர்ந்த தனக்கு, சொந்தமாக டீ எஸ்டேட் உள்ளதாகவும், தனியார் நிறுவனம் ஒன்றில் உயர் அலுவலராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். மேலும் தனக்கு தங்க நகைகளை அணிந்து கொள்வதில் அலாதி பிரியம் அதனாலேயே எப்போதும் தங்க நகைகளை அணிந்தவாறுதான் இருப்பேன் என்று கூறினார். பின்னர் அவர் தனது நண்பர்களுடன் காரில் கர்நாடக மாநிலத்துக்கு புறப்பட்டு சென்றார். 

    • குஜராத்தில் கடந்த ஆண்டு வைர வியாபாரி ஒருவரும் அவரது மனைவியும் துறவறம் பூண்டனர்.
    • அபரிமிதமான செல்வத்திற்கு பெயர் பெற்ற பண்டாரி குடும்பத்தின் முடிவு குஜராத் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது.

    சூரத்:

    குஜராத் மாநிலம் ஹிம்மத்நகரை சேர்ந்த தொழில் அதிபர் பாவேஷ் பண்டாரி. கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரும் இவரது மனைவியும் கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற விழாவில், தங்களுக்கு சொந்தமான ரூ.200 கோடி

    மதிப்பிலான அனைத்து சொத்துகளையும் தானமாக வழங்கி துறவறத்தை ஏற்றுக் கொண்டனர்.

    கடந்த 2022-ம் ஆண்டு இவர்களின் 19 வயது மகளும் 16 வயது மகனும் துறவறத்தை ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் தங்கள் குழந்தைகளை பின்பற்றி பாவேஷ் பண்டாரியும் அவரது மனைவியும் துறவறம் பூண்டதாக அவர்களின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

    இத்தம்பதியர் தற்போது முக்திக்கான பயணத்தை தொடங்க திட்டமிட்டுள்ளனர். வருகிற 22-ந்தேதி நடைபெறும் விழாவில் உறுதிமொழி எடுத்த பிறகு, தம்பதியினர் அனைத்து குடும்ப உறவுகளையும் துறக்க உள்ளனர். பிறகு அவர்கள் நாடு முழுவதும் வெறுங்காலுடன் நடந்து சென்று, யாசகம் பெற்று மட்டுமே உயிர் வாழ்வார்கள்.

    இரண்டு வெள்ளை ஆடைகள், உணவு யாசகம் பெறுவதற்கு ஒருகிண்ணம், ஜைன துறவிகள் உட்காரும் முன் பூச்சிகளை தள்ளி விடுவதற்காக வைத்திருக்கும் ரஜோஹரன் எனப்படும் வெள்ளை துடைப்பம் ஆகியவற்றை மட்டுமே இவர்கள் வைத்திருக்க அனுமதிக்கப்படுவார்கள்.

    அபரிமிதமான செல்வத்திற்கு பெயர் பெற்ற பண்டாரி குடும்பத்தின் இந்த முடிவு குஜராத் முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதற்கு முன் பல கோடி ரூபாய் சொத்துகளை துறந்து சமண துறவியாக மாறிய பவாராலால் ஜெயின் போன்ற சிலரது வரிசையில் இத்தம்பதியரும் இணைந்துள்ளனர். இந்தியாவில் நுண்ணீர் பாசன முறைக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் பவாராலால் ஜெயின் ஆவார்.

    குஜராத்தில் கடந்த ஆண்டு வைர வியாபாரி ஒருவரும் அவரது மனைவியும் துறவறம் பூண்டனர். தங்களின் 12 வயது மகன் துறவறம் பூண்ட 5 ஆண்டுகளுக்கு பின்னர் இவர்களும் அதே பயணத்தை தொடங்கினர். மத்திய பிரதேசத்தில் கடந்த 2017-ல் ஒரு பணக்கார தம்பதியர் தங்களின் 3 வயது மகள் மற்றும் ரூ.100 கோடி சொத்துகளை துறந்து, துறவறம் பூண்டது தலைப்புச் செய்தியானது.

    சுமித் ரத்தோர் (35), அனாமிகா (34) ஆகிய இருவரும் தங்கள் மகளை அவளின் தாத்தா-பாட்டியிடம் ஒப்படைத்துவிட்டு, துறவற வாழ்க்கையை தொடங்கினர். இவர்கள் துறவு வாழ்க்கையை தொடங்குவதற்கு முதல்நாள் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தலையிட்டது. இவர்களின் குழந்தையின் எதிர்கால பாதுகாப்புக்காக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்குமாறு சிவில் நிர்வாகம் மற்றும் காவல்துறையை கேட்டுக்கொண்டது.

    • மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.
    • பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ஒட்டாவா:

    கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தில் உள்ள கவானாக் நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியை சேர்ந்த பூட்டா சிங் கில். கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரான இவர், உள்ளூரில் பிரபல தொழில அதிபராக விளங்கி வந்தார். மேலும் அங்குள்ள பஞ்சாபி சமூகத்தினர் இடையே பெரும் செல்வாக்கு மிக்க நபராக இருந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் கவானாக் நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் பூட்டா சிங் கில் தனது நண்பர்கள் 2 பேருடன் இருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் பூட்டா சிங் கில் உள்பட 3 பேரையும் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றார்.

    இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    அப்போது அங்கு பூட்டா சிங் கில்லும், அவரது நண்பரும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். மற்றொரு நண்பர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவரை போலீசார் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    பட்டப்பகலில் நடந்த இந்த கொடூர கொலை சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கொலைக்கான காரணம் என்ன என்பது தெரியாத நிலையில், சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வீட்டில் யாரும் இல்லாத நிலையில், லாரன்ஸ் தினமும் விளக்குகளை போட்டு அணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.
    • வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    தக்கலை :

    தக்கலை அருகே உள்ள சுவாமியார் மடம் பகுதியை சேர்ந்தவர் பொன்னையா (வயது 80), தொழில் அதிபர். இவரது மகள் வெளியூரில் வசித்து வருகிறார்.

    அவருக்குச் சொந்தமான வீடு கவியலூர் பகுதியில் உள்ளது. இந்த வீட்டை அதே பகுதியைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவர் பராமரித்து வருகிறார். வீட்டில் யாரும் இல்லாத நிலையில், லாரன்ஸ் தினமும் விளக்குகளை போட்டு அணைப்பது உள்ளிட்ட பணிகளை செய்து வந்தார்.

    நேற்று முன்தினம் மாலை அவர், வழக்கம் போல் விளக்குகளை போட்டுள்ளார். சிறிது நேரம் கழித்து அவர் வீட்டின் கதவுகளை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்த நிலையில் நேற்று காலை அவர் அங்கு வந்த போது, வீட்டின் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது பற்றி தொழில் அதிபர் பொன்னையாவுக்கு அவர் தகவல் கொடுத்தார். அவர் வீட்டுக்கு வந்து பார்வையிட்டு விட்டு தக்கலை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். மெயின் கேட் கதவின் பூட்டு மட்டுமே உடைக்கப்பட்டுள்ளது. வீட்டிற்குள் யாரும் செல்ல வில்லை என விசாரணை யில் தெரியவந்தது. இருப்பி னும் பூட்டை உடைத்தது யார்? என்பது குறித்து அங்குள்ள சி.சி.டி.வி காமிரா பதிவுகளை கைப் பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.
    • அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.

    கோவை:

    கோவை காளப்பட்டி அருகே உள்ள நேரு நகரை சேர்ந்தவர் அழகர் ராஜா (வயது 37). தொழில் அதிபர்.

    இவர் பீளமேடு வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே கடந்த 2 ஆண்டுகளாக சித்ராவை சேர்ந்த குமாரசாமி என்பவரது மனைவி நித்யா (36) என்பவருடன் சேர்ந்து பள்ளிக்குழந்தைகளுக்கு தேவையான பொருட்களை விற்பனை செய்யும் அலுவலகம் நடத்தி வந்தார்.

    இந்நிலையில் அழகர் ராஜா, நித்யாவுக்கு ரூ.25 லட்சம் பணம் கொடுக்க வேண்டியதாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல் வாங்கல் தகராறால் மனஸ்தாபம் ஏற்பட்டது. இதன் காரணமாக கடந்த 1 மாதத்துக்கு முன்பு அழகர்ராஜா அலுவலகத்தில் இருந்து வெளியேறினார்.

    சம்பவத்தன்று இவர் தனது சொகுசு காரில் பெரியநாயக்கன் பாளையம் நோக்கி சென்று கொண்டு இருந்தார். கார் விளாங்குறிச்சி 80 அடி ரோட்டில் சென்ற போது நித்யாவின் கணவர் குமாராசாமி உள்பட 3 பேர் காரில் வந்தனர்.

    அவர்கள் அழகர் ராஜாவின் காரை வழி மறித்து நிறுத்தினர். பின்னர் அவரிடம் பணம் கொடுக்கல் வாங்கல் சம்பந்தமாக பேச வேண்டும் எங்களுடன் வாருங்கள் என அழைத்தனர். அவர் மறுக்கவே அந்த கும்பல், தாங்கள் வந்த காரில் அழகர் ராஜாவை கடத்தி சென்றனர்.

    இதனை தொடர்ந்து அவர்கள் அவரை துடியலூர் இடையர்பாளையத்தில் உள்ள சண்முகம் என்பவரது வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    அங்கு அவர்கள் அழகர் ராஜாவை சிறை வைத்து தாக்கி மிரட்டி ஆவணங்களில் கையெழுத்து வாங்கினர். மேலும் அவர் அணிந்து இருந்த 7 பவுன் செயின், 4 பவுன் காப்பு, முக்கால் பவுன் மோதிரம் ஆகியவற்றையும் பறித்தனர்.

    பின்னர் ஒரு நாள் முழுவதும் அவரது வீட்டிலேயே சிறை வைத்தனர். மறுநாள் காலையில் அழகர் ராஜாவை அவர்கள் பெரிய நாயக்கன் பாளையத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகத்துக்கு மிரட்டி அழைத்து சென்றனர்.

    அங்கு வைத்து அந்த கும்பல் குரும்பபாளையத்தில் உள்ள அழகர் ராஜாவுக்கு சொந்தமான 4 முக்கால் ஏ நிலத்தை மிரட்டி சண்முகம் என்பவரது பெயருக்கு கிரையம் செய்தனர்.

    பின்னர் அவர்கள் சொகுசு காரையும் விற்பனை செய்தது போல மிரட்டி கையெழுத்து வாங்கினர். இதனை தொடர்ந்து அந்த கும்பல் நடந்த சம்பவத்தை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது.

    அப்படி கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விட்டு அழகர் ராஜாவை பீளமேட்டில் இறக்கி விட்டு சென்றனர்.

    இது குறித்து அவர் பெரியநாயக்கன்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் தொழில் அதிபரை காரில் கடத்தி சென்று சிறை வைத்து மிரட்டி நகை, சொத்து மற்றும் சொகுசு காரை அபகரித்த குமாரசாமி உள்பட 4 மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.
    • ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    ராசிபுரம்:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் ஜெகன்நாதன் (வயது49) . தொழில் அதிபரான இவர் பத்திர பதிவு தொழில், ஆர்.ஓ. வாட்டர் உற்பத்தி தொழில், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட தொழில்கள் செய்து வருகிறார்.

    இவருக்கும், திருப்பூரை சேர்ந்த ஜெய், சேலத்தை சேர்ந்த தனசேகர் ஆகியோருக்கும் இடையே தொழில் நிமித்தமாக பழக்கம் ஏற்பட்டது. இந்த நிலையில் இவர்கள் 2 பேரின் மூலமாக நாமக்கல் மாவட்டம் வெப்படை பாரதி நகரை சேர்ந்த சிவஞானம் (50) என்பவருக்கு ஜெகநாதனுடன் பழக்கம் ஏற்பட்டது.

    சிவஞானம் நூல் மில் சூப்பர்வைசராகவும், ரியல் எஸ்டேட் தொழிலும் செய்து வருகிறார்.

    கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவஞானம், ஜெகன்நாதனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்டு திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா மகாதேவி கிராமத்தை சேர்ந்த ஜானகி என்கிற புவனேஸ்வரி (26), 25 தொடக்க வேளாண்மை கடன் சங்க தலைமை பொறுப்பு வகித்து வருவதாகவும், கொரோனா காலத்தில் அடமானம் வைத்த நகைகளை ஏலம் விட இருப்பதாகவும், இந்த நகைகளை ஏலம் எடுத்து அதில் 135 பவுன் தங்க நகைகளை உங்களுக்கு குறைந்த விலையில் தருவதாகவும், அதற்கு ரூ. 30 லட்சம் கொடுக்குமாறும் கூறியுள்ளார். மேலும் ராசிபுரம் நகராட்சி அலுவலகம் அருகே நானும், ஜானகியும் காரில் தயார் நிலையில் இருப்பதாகவும், பணத்துடன் அங்கு வந்து கொடுக்குமாறும் கூறியுள்ளார்.

    அதன்படி ஜெகன்நாதன் நேற்று முன்தினம் ராசிபுரம் வந்து அங்கு காரில் காத்திருந்த சிவஞானம் முன்னிலையில் ஜானகியிடம் ரூ.30 லட்சத்தை கொடுத்துள்ளார்.

    இதையடுத்து பணத்தை பெற்றுக்கொண்ட ஜானகி, அருகில் உள்ள ஆர்.சி.எம்.எஸ். கூட்டுறவு வங்கியில் நகைகளை வாங்கி விட்டுவதாக கூறி பணத்துடன் சென்றார். அப்போது ஜானகி சுடிதார் அணிந்திருந்தார். ஆனால் வெகுநேரமாகிவும் அவர் திரும்பி வரவில்லை. சந்தேகம் அடைந்த ஜெகநாதன், அங்கு சென்று விசாரித்தார். அப்போது ஜானகி பர்தா அணிந்து ஆட்டோவில் ஏறி சென்றதாக அக்கம் பக்கத்தினர் கூறினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகன்நாதன் தன்னை நூதனமாக ஏமாற்றியுள்ளதை அறிந்து ராசிபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிவஞானம், ஜானகி, உடந்தையாக இருந்த நாமக்கல் பொன்விழா நகரை சேர்ந்த சத்யா (35), சங்ககிரியை சேர்ந்த ராமச்சந்திரன் (55), அவரது மனைவி கஜலட்சுமி (43) ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.25 லட்சம், ஒரு சொகுசு கார் மீட்கப்பட்டுள்ளது. சம்பவம் நடைபெற்று 24 மணி நேரத்தில் இந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

    • சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
    • இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.

    சிட்னி:

    பிரதமர் மோடி, ஜப்பான் மற்றும் பப்புவா நியூ கினியா சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு நேற்று ஆஸ்திரேலியாவுக்கு சென்றார்.

    சிட்னி நகருக்கு சென்றடைந்த மோடிக்கு ஆஸ்திரேலிய அரசு சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலையத்தில் மோடிக்கு ஆஸ்திரேலிய வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    பிரதமர் மோடி இன்று ஆஸ்திரேலியாவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். அந்நாட்டில் உள்ள முக்கிய நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

    சுரங்கம் மற்றும் கனிமங்கள் புதைபடிவ எரி பொருள் துறை, பசுமை எரிசக்தி உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த தொழில் அதிபர்களுடன் மோடி ஆலோசனை நடத்தினார்.

    இந்தியாவில் தொழில் வாய்ப்புகள் குறித்து மோடி எடுத்துரைத்தார். அப்போது அவர் கூறும்போது, உலகின் தலைசிறந்த முதலீட்டு நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னிலையில் உள்ளது. இந்தியாவின் வளர்ச்சி பாதையில் ஆஸ்திரேலிய நிறுவனங்கள் பங்கேற்க அழைப்பு விடுக்கிறேன்.

    இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலிய நிறுவனங்களை கேட்டுக் கொள்கிறேன் என்றார்.

    பிரதமர் மோடி, சிட்னியில் இந்திய வம்சாவளியினரின் பங்களிப்பை கொண்டாடும் சமுதாய நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

    பின்னர் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசுடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்துகிறார். இதில் வர்த்தக மேம்பாடு, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்துகிறார்கள்.

    முன்னதாக பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பத்திரிக்கை ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

    ஆஸ்திரேலியாவுடனான இந்தியாவின் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறேன். நான் எளிதில் திருப்தி அடையும் நபர் அல்ல. அதே போல்தான் ஆஸ்திரேலிய பிரதமர் அல்பானீசை பார்த்திருக்கிறேன். இரு தரப்பு உறவுகளை எப்படி அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பதை ஆராய்வதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன்.

    இரு நாடுகளுக்கும் இடையே வாழும் பாலமாக இந்திய புலம்பெயர் மக்கள் உள்ளனர். அவர்களால் இரு தரப்பு உறவுகள் வளர்க்கப்பட்டு வருகிறது.

    உக்ரைனில் நடந்து வரும் போர் விவகாரத்தில் இந்தியாவின் நிலைபாட்டை ஆஸ்திரேலியா புரிந்து கொண்டுள்ளது. நல்ல நண்பர்களாக இருப்பதன் நன்மை என்னவென்றால் நாம் சுதந்திரமாக விவாதிக்கலாம் மற்றும் ஒரு வருக்கொருவர் பார்வையை பாராட்டலாம். இந்தியாவின் நிலைப்பாட்டை ஆஸ்திரேலியா புரிந்து கொள்கிறது. அது (உக்ரைன் போர்) எங்கள் இரு தரப்பு உறவை பாதிக்காது.

    வளர்ந்து வரும் இரு நாட்டு உறவுகள், திறந்த மற்றும் சுதந்திரமான இந்தோ-பசிபிக்கை உருவாக்க ஆழமான பாதுகாப்பு உறவுகளை ஏற்படுத்தும்.

    இந்தோ-பசிபிக் பகுதி, காலநிலை மாற்றம், இயற்கை பேரழிவுகள், பயங்கரவாதம், தகவல் தொடர்பு பாதுகாப்பு கடற்கொள்ளை போன்ற பல சவால்களை எதிர் கொள்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ஆஸ்திரேலியாவில் இருந்து பிரதமர் மோடி நாளை இந்தியா திரும்புகிறார்.

    • ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
    • தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாக கூறினார்.

    ஆலந்தூர்:

    சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து திருச்சி செல்லும், பயணிகள் விமானம் புறப்பட தயாரானது. அந்த விமானத்தில் செல்ல வந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் பாதுகாப்பு அதிகாரிகள் பரிசோதித்தனர்.

    அப்போது சென்னையைச் சேர்ந்த தொழில் அதிபரான ராஜ்குமார் என்பவரின் கைப்பையை மத்திய தொழிற் பாதுகாப்பு படை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில், 7 துப்பாக்கி குண்டுகள் இருந்தன. இதைத்தொடர்ந்து ராஜ்குமாரின் பயணத்தை ரத்து செய்து அவரை விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், தனது பாதுகாப்புக்காக முறைப்படி லைசென்சு பெற்று, கை துப்பாக்கி வைத்திருப்பதாகவும், பயணத்தின்போது, தவறுதலாக கார் டிரைவர் துப்பாக்கி குண்டு இருந்த கைப்பையை மாற்றி வைத்துவிட்டார் என்றும் தெரிவித்தார்.

    இதையடுத்து போலீசார் அவரிடம் எழுதி வாங்கிவிட்டு இதுபோன்ற சம்பவம் இனிமேல் நடைபெறக்கூடாது என்று எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் சென்னை விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை
    • கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.

    ராஜாக்கமங்கலம், மே.16-

    ராஜாக்கமங்கலம் அருகே கணபதிபுரம் பகுதியை சேர்ந்தவர் பூதலிங்கம். இவரது மகன் முருகன் (வயது 43) தொழிலதிபர்.

    இவர் தனது வீட்டின் வளாகத்தில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். ரியல் எஸ்டேட் மற்றும் வெளி நாட்டிற்கு பொருட்கள் ஏற்றுமதி உள்ளிட்ட பல்வேறு தொழில்கள் செய்து வருகிறார். இவரது மனைவி மேரிபெல். இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இதில் மூத்த மகன் சென்னை யில் படித்து வருகிறார்.

    இன்னொரு மகனும், மகளும் வெளிநாட்டில் படித்து வருகிறார்கள். முருகன் அவரது மனைவி யும் சென்னையில் உள்ள மகனை பார்ப்பதற்காக சென்றிருந்தனர். நேற்று காலை பூதலிங்கம் மகன் முருகன் வீட்டிற்கு வந்து மீன் தொட்டியில் உள்ள மீன்களுக்கு உணவளிக்க வந்திருந்தார். அப்போது நிதி நிறுவனத்தின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் கதவுகளும் உடைக்கப் பட்டு திறந்து கிடந்தது. வீட்டில் இருந்த பீரோக்களும் உடைக்கப் பட்டு இருந்தது.

    இதுகுறித்து பூதலிங்கம் மகன் முருகனுக்கு தகவல் தெரிவித்தார். முருகன் ராஜாக்கமங்கலம் போலீ சுக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். விசாரணையில் 53 பவுன் நகை மற்றும் ரூ. 6 லட்சத்து 20 ஆயிரம் கொள்ளையடிக்கப்பட்டு இருப்பது தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப் பட்டு வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளை போலீசார் பதிவு செய்தனர். அப்போது கைரேகைகள் எதுவும் சிக்கவில்லை.

    கொள்ளையர்கள் கையுறை அணிந்து கை வரிசை காட்டி இருப்பது தெரிய வந்துள்ளது. மோப்ப நாயும் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. கொள்ளை யர்கள் தடயங் கள் சிக்காமல் இருக்கும் வகையில் மிளகாய் பொடி யையும் வாசலில் தூவி சென்றுள்ளனர். மின் விளக்குகளை துண்டித்து கை வரிசையில் ஈடுபட்டி ருப்பதும் தெரியவந்துள்ளது. கொள்ளையர்களை பிடிக்க 3 தனிப்படை அமைக்கப் பட்டுள்ளது.

    தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சி களை கைப்பற்றி விசா ரணை மேற்கொண்டு வரு கிறார்கள். மேலும் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அவர்க ளது செல்போன் அழைப்புகளையும் போலீசார் சோதனை செய்தனர். முருகன் ஊரில் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளை யர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்களுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்திக்கி றார்கள். மேலும் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கையுறை அணிந்திருந்ததுடன் மிளகாய் பொடியையும் தூவி சென்றுள்ளனர்.

    மேலும் மின்விளக்கை துண்டித்து கைவரிசையில் ஈடுபட்டுள்ளதால் ஏற்கனவே கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் இதில் கைவரிசை காட்டி இருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எனவே பழைய கொள்ளையர்களின் விவரங்களை சேகரித்தும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். 

    • அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.
    • போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த பின்னலாடை ஏற்றுமதியாளர் பிரபுதரன். தொழிலதிபரான இவர் கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காலத்தில் அமெரிக்காவில் உள்ள ஒரு நிறுவனத்துக்கு கையுறை, முககவசம் உள்ளிட்ட மருத்துவ கவச உடைகளை சர்வதேச தரச்சான்றுடன் கொடுப்பதற்கு ஆர்டர் எடுத்தார். பின்னர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த பனியன் வர்த்தகரான சினேகாஷிஸ் முகர்ஜி (வயது 36) என்பவர் மூலமாக அமெரிக்க நிறுவனத்தினர் கேட்ட தரச்சான்றுகளுடன் மருத்துவ உபகரணங்களை சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தார்.

    இதைத்தொடர்ந்து சினேகாஷிஸ் முகர்ஜி, சம்பந்தப்பட்ட ஆடைகளை பிரபுதரனுக்கு அனுப்பி வைத்தார். கடந்த 2019 முதல் 2020-ம் ஆண்டு காலகட்டத்தில் இதற்காக ரூ.4 கோடியே 10 லட்சத்தை பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜிக்கு அனுப்பிவைத்ததாக தெரிகிறது.

    இந்தநிலையில் அமெரிக்காவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கையுறை, முக்கவசம் உள்ளிட்ட மருத்துவ ஆடைகள் உரிய தரத்தில் இல்லை என்றும், அவை போலியான சான்றிதழ் தயாரித்து அனுப்பி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்தினர் பிரபுதரனுக்கு ஆடைகளை திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபுதரன், சினேகாஷிஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டபோது அவர் முறையாக பதில் அளிக்கவில்லை. அதன்பிறகே போலி சான்றிதழ் தயாரித்து ஆடைகளை அனுப்பி வைத்து மோசடி செய்தது தெரியவந்தது.

    இதுகுறித்து பிரபுதரன் திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு போலீசில் கடந்த 2022-ம் ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி, சினேகாஷிஸ் முகர்ஜி, அவரது மனைவி, தந்தை உள்பட 4 பேர் மீது மோசடி வழக் குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

    இந்தநிலையில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக் டர் பிரகாஷ் தலைமையிலான தனிப்படையினர் கொல்கத்தா சென்று முகாமிட்டு, மோசடி சம்பவம் தொடர்பாக சினேகா ஷிஸ் முகர்ஜியை கைது செய்தனர். பின்னர் அவரை திருப்பூர் அழைத்து வந்து விசாரித்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.

    • நீரஜ் பஜாஜ் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது.
    • லோதா மலபார் டவர் என்று பெயரிடப்பட்ட கட்டிடம் தெற்கு மும்பை வாக்கேஷ்வரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது.

    தெற்கு மும்பையில் உள்ள வாக்கேஷ்வர் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு டவர் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. இந்த குடியிருப்பில் தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ் ரூ.252 கோடிக்கு வீடு வாங்கியுள்ளார். லோதா குழுமத்தை சேர்ந்த மேக்ரோடெக் டெவலப்பர்ஸ் நிறுவனம் இந்த குடியிருப்பை கட்டி வருகிறது. அந்த நிறுவனத்திடம் இருந்து நீரஜ் பஜாஜ் இந்த வீட்டை வாங்கியுள்ளார். அவர் வாங்கியுள்ள வீடு 18 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் 3 தளங்களை கொண்டது. இதுவே இந்தியாவில் மிக அதிகமான தொகைக்கு விற்கப்பட்ட வீடு ஆகும்.

    கடந்த மாதம் மும்பையில் வொர்லி சொகுசு டவரில் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவு கொண்ட சகல வசதிகளுடன் கூடிய சொகுசு வீடு தொழில் அதிபர் பி.கே.கோயங்காவுக்கு ரூ.240 கோடிக்கு விற்கப்பட்டது. ஆனால் அதையும் மிஞ்சி இந்த வீடு ரூ.252 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது. 1 சதுர அடியின் விலை சுமார் ரூ.1.40 லட்சம் ஆகும். வீட்டை வாங்கியுள்ள தொழில் அதிபர் நீரஜ் பஜாஜ், பஜாஜ் ஆட்டோ குழுமத்தின் தலைவர் ஆவார். லோதா மலபார் டவர் என்று பெயரிடப்பட்ட இந்த கட்டிடம் தெற்கு மும்பை வாக்கேஷ்வரில் உள்ள கவர்னர் மாளிகைக்கு அருகில் கட்டப்பட்டு வருகிறது. 31 மாடிகளுடன் அமையவுள்ள இந்த பிரமாண்ட டவரின் கட்டுமான பணிகள் தற்போதுதான் தொடங்கப்பட்டுள்ளது. இதை 2026-ம் ஆண்டு ஜூன் மாதத்துக்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த வீட்டின் பத்திர பதிவுக்கு மட்டும் ரூ.15 கோடி ஆகியுள்ளது.

    • சி.சி.டி.வி. காமிராவில் 2 கொள்ளையர் உருவம் சிக்கியது
    • தனிப்படை போலீசார் விசாரணை

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகே அப்சர்வேட்டரி தெரு சேர்ந்தவர் யூஜின்தாஸ் (வயது 70), தொழில் அதிபர்.

    இவரது மனைவி கமலா இவருடைய மகள் சென்னையில் டாக்டராக உள்ளார். இதனால் யூஜின் தாஸும் கமலாவும் கடந்த 2-ந்தேதி மகளைப் பார்க்க சென்னைக்கு சென்ற னர். இந்த நிலையில் நேற்று மாலை வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததை பார்த்த பக்கத்து வீட்டுக்காரர் சென்னை சென்ற யூஜின்தாஸ் வந்துவிட்டதாக கருதி அவரை பார்ப்பதற்காக சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவும் உடைக்கப்பட்டிருந்தது.

    இதனால் அவர், யூஜின் தாஸ் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் யூஜின் தாஸ் வீட்டிற்கு வந்தனர். பின்னர் யூஜின்தா சுக்கும் நேசமணி நகர் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசா ரணை நடத்தினார்கள்.அவர்கள் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோக்களும் திறந்து இருந்தது. இருந்து நகை பணத்தை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றி ருந்தனர். வீட்டில் இன்னொரு அறையில் இருந்த நகைகள் கொள்ளை போகாமல் இருந்ததும் கண்டுபிடிக் கப்பட்டது.

    இதனால் எவ்வளவு நகை பணம் கொள்ளை யடிக்கப்பட்டது என்பது குறித்து போலீசார் விசார ணை நடத்தினார்கள்.யூஜின்தாஸ் ஊருக்கு வந்தால்தான் எவ்வளவு நகை கொள்ளை அடிக்கப் பட்டது என்பது குறித்த விவரம் தெரியவரும். இதையடுத்து கைரேகை நிபுணர்களும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. கைரேகை நிபுணர்கள் வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளைபதிவு செய்தனர்.

    மேலும் மோப்பநாய் வீட்டில் மோப்பம் பிடித்து விட்டு சிறிது தூரம் ஓடியது. யாரை யும் கவ்வி பிடிக்கவில்லை. போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளை யர்கள் இரண்டு பேரின் உருவம் அதில் பதிவாகி இருந்தது. அந்த காட்சி களை போலீசார் கைப்பற்றி யுள்ளனர். யூஜின்தாஸ் ஊரில் இல்லாததை நோட்டமிட்டே கொள்ளையர்கள் இந்த கைவரிசையில் ஈடுபட்டுள் ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளையர்க ளுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கி றார்கள். தொடர்ந்து இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    கெர்ளளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

    ×